Thiruvalluvar
திருக்குறள்

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை – குறள்: 802

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்குஉப்புஆதல் சான்றோர் கடன். – குறள்: 802 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிறசான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை, அதனால் அவ்வுரிமைக்குச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழகிய நட்புஎவன் செய்யும் – குறள்: 803

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை. – குறள்: 803 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமேசெய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்புபயனற்றுப் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கால நண்பர் தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழைதகையான் வேண்டி யிருப்பர் – குறள்: 804

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையான்கேளாது நட்டார் செயின். – குறள்: 804 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழகிய நட்பின் உரிமை காரணமாகத் தமது நண்பர் தம்மைக்கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை – குறள்: 805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்கநோதக்க நட்டார் செயின். – குறள்: 805 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அதுஅறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்டார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எல்லைக்கண் நின்றார் துறவார் – குறள்: 806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. – குறள்: 806 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்புவரம்பு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவந்த செய்யினும் அன்புஅறார் – குறள்: 807

அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர். – குறள்: 807 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைக்செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார். . ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை – குறள்: 808

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாள்இழுக்கம் நட்டார் செயின். – குறள்: 808 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடாஅர் வழிவந்த கேண்மையார் – குறள்: 809

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு. – குறள்: 809 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல்இருப்பவரை உலகம் போற்றும். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை, [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாடாது நட்டலின் கேடுஇல்லை – குறள்: 791

நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. – குறள்: 791 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்துவிடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பை நிலையாகக் கைக்கொள்ள [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை – குறள்: 792

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். – குறள்: 792 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]