Thiruvalluvar
திருக்குறள்

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக – குறள்: 861

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. – குறள்: 861 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதேபகைமாட்சி எனப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் – குறள்: 862

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. – குறள்: 862 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; சிறந்த துணையில்லதவனாகவும், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஞ்சும் அறியான் அமைவுஇலன் – குறள்: 863

அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. – குறள்: 863 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போருக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நீங்கான் வெகுளி நிறைஇலன் – குறள்: 864

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. – குறள்: 864 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தை விடாதவனாகவும்; அடக்கமில்லாதவனாகவு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் – குறள்: 865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

காணாச் சினத்தான் கழிபெரும் – குறள்: 866

காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்பேணாமை பேணப் படும். – குறள்: 866 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற – குறள்: 867

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்துமாணாத செய்வான் பகை. – குறள்: 867 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரைத் தொடங்கி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குணன்இலனாய் குற்றம் பலஆயின் – குறள்: 868

குணன்இலனாய் குற்றம் பலஆயின் மாற்றார்க்குஇனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 868 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் – குறள்: 869

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். – குறள்: 869 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும்பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லான் வெகுளும் சிறுபொருள் – குறள்: 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லாது ஒளி. – குறள்: 870 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம்காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]