
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்பற்றற்கு அரியது அரண். – குறள்: 747 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச்சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் [ மேலும் படிக்க …]
பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்ஆகுதல் மாணார்க்கு அரிது. – குறள்: 823 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வுபடைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; [ மேலும் படிக்க …]
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல். – குறள்: 675 – அதிகாரம்: வினை செயல்வகை , பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment