
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. – குறள்: 432
– அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செலவிடவேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும்; தவறான தன்மானமும்; அளவிறந்த மகிழ்ச்சியும்; அரசனுக்குக் குற்றங்களாம்.
மு. வரதராசனார் உரை
பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.
G.U. Pope’s Translation
A niggard hand, o’erweening self-regard and mirth Unseemly, bring disgrace to men of kingly birth.
– Thirukkural: 432, The Correction of Faults , Wealth
Be the first to comment