
பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. – குறள்: 732
– அதிகாரம்: நாடு, பால்: பொருள்
கலைஞர் உரை
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும்,
கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பல்வகைப் பொருள் வளமிகுதியாற் பிற நாட்டாராலும் விரும்பப்படுவதாய்; கேடில்லாமையோடுகூடி; நானிலச்செல்வமும் மிகுதியாக விளைவதே வறுமை யில்லாத நாடாவது.
மு. வரதராசனார் உரை
மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
G.U. Pope’s Translation
That is a ‘land’ which men desire for wealth’s abundant share,
Yielding rich increase, where calamities are rare.
– Thirukkural: 732, The Land, Wealth
Be the first to comment