
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது. – குறள்: 248
– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை
இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஏதேனும் ஒரு வகையிற் செல்வத்தை யிழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர்; ஆயின், அருட் பண்பை யிழந்தவரோ ஒரேயடியாய் அழிந்தவராவர்; பின்பு ஒருகாலும் ஆக்கம் பெறார்.
மு. வரதராசனார் உரை
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
G.U. Pope’s Translation
Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose, ‘benevolence,’ lose all ; nothing can change their doom.
– Thirukkural: 248, The Possession of Benevolence, Virtues
Be the first to comment