
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர். – குறள்: 406
– அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது.
காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நூல்களைக் கல்லாதவர்; உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; பிறர்க்குப் பயன் படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.
மு. வரதராசனார் உரை
நூல்களைக் கல்லாதவர்; உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; பிறர்க்குப் பயன் படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.
G.U. Pope’s Translation
‘They are’; so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought.
– Thirukkural: 406, Ignorance, Wealth
Be the first to comment