செய்வானை நாடி வினைநாடி
திருக்குறள்

செய்வானை நாடி வினைநாடி – குறள்: 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். – குறள்: 516 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்வானது தன்மையை முதற்கண் [ மேலும் படிக்க …]

இதனை இதனால் இவன்முடிக்கும்
திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் – குறள்: 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்துஅதனை அவன்கண் விடல். – குறள்: 517 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நன்மையும் தீமையும் நாடி
திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி – குறள்: 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். – குறள்: 511 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

ஏரினும் நன்றால் எருவிடுதல்
திருக்குறள்

ஏரினும் நன்றால் எருவிடுதல் – குறள்: 1038

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு. – குறள்: 1038 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செல்லான் கிழவன் இருப்பின் – குறள்: 1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். – குறள்: 1039 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் – குறள்: 1040

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும். – குறள்: 1040 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் [ மேலும் படிக்க …]

தோப்பு
குழந்தைப் பாடல்கள்

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]

தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

Thiruvalluvar
திருக்குறள்

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை – குறள்: 663

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமம் தரும். – குறள்: 663 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். [ மேலும் படிக்க …]

ஆடிக் குடத்தடையும்
காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டைபற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்உற்றிடுபாம் பெள்ளனவே யோது. – காளமேகப் புலவர் மேற்போக்கான சொல்லமைப்பிலே ஒன்றாகவும், ஆராய்ந்து பார்த்தால் இரு பொருள்படும்படியும் அமைந்துள்ள [ மேலும் படிக்க …]